காமம் பற்றி ஓஷோ வின் பார்வை

By sivaprakashThiru - June 16, 2023

 #கேள்வி ‪ : ஓஷோ , உங்களை ஏன் ' ஒரு காமச்சாமியார் ' என்று மக்கள் கருதுகிறார்கள் ?


‪#ஓஷோபதில்‬ : 


" நீங்கள் ஒரு உடலுறவு வைத்தியரிடம் ( Sex - Doctor ) சென்றால் அவர் உடலுறவைப் பற்றி பேசாமல் புத்தரைப் பற்றியா பேசுவார் ! 


அப்பொழுது அவரை ' நீங்கள் , காமவைத்தியர் ' என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த முட்டாள்கள் என்னை அழைக்கிறார்கள் !


 அதற்கு நான் என்ன செய்வது ? 


என்னிடம் வரும் பெரும்பான்மையான கேள்விகள் , " என்னால் தியானம் செய்ய முடியவில்லை . 


பெண்கள் துரத்தித் துரத்தி வருகிறார்கள் . 


தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது காமம் அதிகரிக்கிறது , என்ன செய்வது ?' ,


 ' சுய இன்பம் உடலுக்குக் கெடுதலா ?' , ' சுய இன்பம் பாபகாரியமா ' , '


 இதிலிருந்து விடுதலை அடைவது எப்படி ?' 


......இப்படியேதான் இருக்கின்றன !😏😏😏


 நானும் பழைய மதவாதிகளைப் போல , ' அது பாபம் , இது தீங்கு , இது தெய்வக் குற்றம் , கண் போய்விடும் .....' அப்படி , இப்படி என்று மேம்போக்காகச் சொல்லி உங்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தலாம் . 


ஆனால் அது என்னால் முடியாத காரியம் . 


பாலுணர்வு மற்றும் அதனுடைய பல பரிமாணங்களைப் பற்றி கூறுகிறேன் .


 நான் காமச்சாமியாரா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் .


( 1 ) . பசி உணர்வும் , பாலுணர்வும் இயற்கை மனிதனுக்கு கொடுத்த அடிப்படையான உணர்வுகள் .


 மற்ற உணர்வுகள் அனைத்தும் இவற்றுக்கு அடுத்ததுதான் . 


இதில் பசி உணர்வு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் ,


 பாலுணர்வு தன் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் தேவையாக இருக்கிறது .


 இவற்றில் பாலுணர்வை எல்லா பழைய மதங்களும் கண்டிக்கின்றன .


 இதற்கு முக்கிய காரணம் இது மிகவும் உணர்வு மயமானது . 


உணர்வு மேலோங்கும்பொழுது அறிவு வேலை செய்யாது .


 இதனால்தான் பெற்றோர்களும் , சமூகமும் காதலுக்கு எதிராகவே இருக்கிறது . 


ஏனெனில் சாதிக்கட்டுப்பாடு மிகுந்த அந்தக் காலத்தில் இது வெறுத்து ஒதுக்கப்பட்டதாக இருந்தது . 


ஏன் இப்பொழுதும் கிராமங்களில் சாதிப்பற்று மிக அதிகம் .


(2) . அறிவை மழுங்க வைக்கும் இந்த உணர்வு சமூகத்துக்கு ஆபத்தானது என்று எல்லா மதங்களும் ஒருசேர கண்டிக்கின்றன . 


ஆனால் இயற்கை இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது ! 


தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கே குறி விரைக்கிறது என்று டாக்டர்கள் கண்டறிந்திருக்கிறார்கள் !


 என்னுடைய அணுகுமுறையே புரிந்துகொள்ளுதல்தான் . 


அடக்குதலோ , கண்டித்தலோ அல்ல .


 அந்த வகையில் பார்க்கும்பொழுது , ஒரு குழந்தை பாலுணர்வால்தான் ஆக்கப்பட்டிருக்கிறது . 


ஒரு குழந்தை என்பது பாலுணர்வின் ஒட்டுமொத்த உருவம் ! 


இதை எந்த மதவாதியும் மறுக்க முடியாது ...


(3) ஒரு குழந்தை எந்த அளவுக்குப் பாலுணர்வால் நிரப்பப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஆண்மையும் பெண்மையும் கலந்து அழகும் அறிவும் நிரம்பி இருக்கும் . 


மிகச்சிறந்த அறிவாளிகள் , அதிகமான பாலுணர்வு கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது !


 அதைப்போல மிகச்சிறந்த கலைஞர்கள் மற்றும் புதுமையைப் படைப்பவர்கள் , மிகச் தைரியசாலிகள் எல்லாம் பாலுணர்வு மிக்கவர்கள் .


 சுருக்கமாகச் சொன்னால் இந்த உயிரினத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தத் தெய்வீகப் பாலுணர்வைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டாமா ? 


இதை நான் உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லுவது தவறா ?


(4) ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் .


 உங்கள் சக்தி அனைத்தும் பாலுணர்வு சக்திதான் . 


அதன் வெளிப்பாடுதான் வேறு வேறு விதமாக இருக்கிறது . 


ஆன்மீகத்தைப் பொறுத்தவரையில் இந்த சக்தி , கீழான நிலையில் பாலுணர்வாகவும் , மேலான நிலையில் தியானமாகவும் இருக்கிறது . 


மற்ற வெளிப்பாடுகள் எல்லாம் இந்த இரண்டுக்கும் இடையேதான் பல பரிமாணங்களில் அமைந்திருக்கின்றன . 


இப்பொழுது பாலுணர்வைப் பற்றி ஆழமாகப் பார்ப்போம் .


(5) . பாலுணர்வை நீங்கள் எவ்வளவு தீவிரமாக அடக்குகிறீர்களோ அவ்வளவு தீவிரமாக ஆழமாக அது உங்கள் பிரக்ஞையற்ற மனதிற்குள் ( Unconcious Mind ) சென்றுவிடுகிறது .


 இந்த அடக்குதல் உங்களிடம் தீவிரமான ஆவலை ஏற்படுத்துகிறது . 


அப்பொழுது உங்கள் கண்கள் முழுவதும் காமம் தான் வழியும் . 


நீங்கள் பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்கும் இந்தப் போலிச்சாமியார்களின் கண்களைச் சற்று உற்று பாருங்கள் புரியும் ! 


அதிகமான காம உணர்வு அதிகமான கற்பனையால் விளைகிறது . 


நீங்கள் அழகானவள் என்று நினைக்கும் ஒரு பெண்ணையோ .....நீங்கள் அழகானவன் என நினைக்கும் ஒரு ஆணையோ நெருங்கிச் சற்று ஆழமாகப் பாருங்கள் .


 அப்பொழுது உங்கள் கற்பனையான அதீத அழகு மறைந்து உண்மை தெரிய ஆரம்பிக்கும் . 


இந்தச் சஞ்சலத்துக்கு நம் மனம்தான் காரணம் என்று புரிந்து திடுக்கிடுவீர்கள் !


‪#‎ஆணும்‬ பெண்ணும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இதுதான் முக்கிய காரணம் . 


ஒருசில தவறுகள் நடக்கலாம் . ஆனால் இந்த முறை மிகவும் வரவேற்கத்தக்கது .


 ஒரு பெண்ணின் அழகு , அவளுக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தது . 


தூரம் அதிகமாக அதிகமாக அழகு கூடும் ! 


தூரம் குறையக் குறைய அழகும் குறையும் ! 


இதை உங்கள் அனுபவத்தில் புரிந்துகொள்ளலாம் .


(6) இந்த பூனா ஆசிரமத்தில் 100 -க்கு 90 சதவிகித ஆண்களும் பெண்களும் நட்பு முறையிலேயே பழகுகிறார்கள் .


 மீதமுள்ள 10 சதவிகித பேர்கள் பாலுணர்வால் உந்தப்பட்டால் , அவர்களாகவே இதை விட்டு வெளியேறி விடுகிறார்கள் .


 பிறகு அவர்கள் சமநிலை அடைந்து திரும்புகிறார்கள் . 


ஆண்களும் , பெண்களும் கூடும் இடத்தில் இது தவிர்க்க முடியாததுதான் .


 ஆனால் , இங்கு அதீத கவர்ச்சியும் இல்லை ; காமமும் இல்லை .


 எப்பொழுது , ஒரு இயற்கையான உணர்வை அங்கீகரித்து , அதைப் புரிந்துகொண்டு அதனுடன் இயைந்து விழிப்புணர்வாகச் செல்கிறோமோ அப்பொழுது நம்மிடம் ஒரு சமநிலை (Balance ) ஏற்படுகிறது . 


இந்த ஆசிரமத்தில் அந்த சமநிலையில்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள் .


ஆரம்பத்தில் இங்கு வரும் ஆணும் , பெண்ணும் காம உணர்வு மிக்கவர்களாகவே இருக்கிறார்கள் .


 ஆகவேதான் , முதலில் வரும் வெளியாட்கள் இந்த ஆஸ்ரமத்தைப் பார்த்து அருவருப்பு அடைகிறார்கள் ; திடுக்கிடுகிறார்கள் .


 இவர்கள்தான் இங்கு 'எல்லாம் நடக்கிறது ' என்று பிரச்சாரம் செய்பவர்கள் . 


இதற்கு காரணம் நான் அல்ல .


 உங்களுடைய மதகுருமார்களும் , பாதிரிமார்களும்தான் ! 


ஆரம்பத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் இங்கு இருந்தால் அவர்களிடம் ஒரு சமநிலை ஏற்படுகிறது . 


பிறகு அவர்களிடம் அமைதியும் ஆழ்ந்த இன்பமும் ஏற்படுகிறது . 


பெண்களின் கவர்ச்சி மெல்ல மெல்ல தேய ஆரம்பிக்கிறது .


 இதை ஒருவர் அனுபவத்தில்தான் புரிந்துகொள்ள முடியும் .


(7) . பாலுணர்வு நான்கு நிலைகளைக் கொண்டது . 


இதைச் சற்று ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் . 


அதைப் பற்றியெல்லாம் உங்கள் மதகுருமார்கள் ஒருக்காலும் சொல்லமாட்டார்கள் . 


ஏனெனில் இது தீண்டத்தகாத சமாச்சாரம் ( Untouchable Matter ) .


( a) முதல் நிலை : சுய பாலுணர்வு ( Auto Sexual).


ஒரு குழந்தை முதலில் தன் அழகிய உடலை மிகவும் நேசிக்கிறது . 


தன் கட்டைவிரலை சூப்பும்பொழுது அதற்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது . 


பிறகு வயது ஏற ஏற அது தன் பாலியல் உறுப்போடு விளையாடுகிறது .


 அப்பொழுது அது பேரானந்தம் கொள்ளுகிறது . 


ஆனால் அதன் முக்கியத்துவம் அதற்குத் தெரியாது . 


இது இயற்கையான உணர்வு . இதில் எந்தத் தவறும் இல்லை .


 பெற்றோர்கள் வீணாகக் குழப்பம் அடைய வேண்டாம் . 


நீங்கள் செய்ய வேண்டியது அந்தப் பாலுறுப்பையும் , கைவிரல்களையும் சுத்தம் செய்து வைத்திருத்தல் மட்டுமே


 தயவு செய்து அதைக் கண்டிக்காதீர்கள் .


 அடிக்காதீர்கள் .


 ( இந்த அடக்கு முறையே பயமாக , அருவருப்பாக ஆழ்மனதில் பதிகிறது ) 


‪#‎இன்னும்‬ சிறிதளவு வயது கூடி சுமார் 3 - லிருந்து 4 - வயதாக இருக்கும்பொழுது இது ஏதோ பழக்கமாகிவிடுமோ என்று அஞ்சி சமூகம் அவன்மேல் பாய ஆரம்பிக்கிறது .


 ' அதைத் தொடாதே , அது அசிங்கம் , பார்ப்பவர்கள் உன்னை வெறுப்பார்கள் ......' இப்படிச் சொல்லி கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள் .


 அவர்கள் கோபத்தில் அவனை அடிக்கிறார்கள் .


 அவன் புரியாமல் பெற்றோர்மேல் கோபம் கொள்ளுகிறான் . 


மறுக்க ஆசைப்படுகிறான் . 


அது முடியாததால் அழ ஆரம்பிக்கிறான் .


 தன் மகிழ்ச்சியில் இவர்கள் குறுக்கிடுகிறார்கள் என்று வஞ்சம் கொள்ளுகிறான் .


 ஒருவித குற்ற உணர்வு அவனுடைய ஆழ்மனதில் பதிய ஆரம்பித்துவிடுகிறது . 


பிறகு அவன் பாசாங்கு செய்கிறான் .


 பொய் சொல்ல ஆரம்பிக்கிறான் .


 மொத்தத்தில் அவன் ஒரு தேர்ந்த தந்திரசாலியாகிறான் . 


அவன் பெற்றோர்களை ஏமாற்ற நினைக்கிறான் .


 நல்ல நடிகனாகிவிடுகிறான் !


 இப்பொழுது பெற்றோர்கள் அவனை ( அல்லது அவளை ) முழுமையாகக் கெடுத்துவிட்டார்கள் - நல்லவனாகத் திருத்த நினைத்து ! 


இந்த நிலையிலேயே பெரும்பாலோர் நின்றுவிடுகிறார்கள் . 


இதனால் என்ன நேரிடுகிறது ? 


இந்த உலகம் முழுவதும் சுய இன்பம் ( Masturbation) காணுதல் பரவலாகக் காணப்படுகிறது ! 


இதனால் மருத்துவம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது . 


ஆனால் இது பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு மறைந்துவிடும் . 


ஆனால் வாலிபத்தில் பாலுணர்வு இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது .


 விந்து முந்தி வருவதைக் கட்டுப்படுத்த முடியாது . 


இதனால் மணவாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் .


அத்துடன் இவர்களில் சிலர் பரம்பரை நாட்டு வைத்தியர் என்று சொல்லிக்கொண்டு , ' சுய இன்பம் உங்கள் அறிவை மங்கச் செய்யும் , ஆண்மையைப் பாதிக்கும் , கண்பார்வை மங்கும் , உடல் இளைக்கும் .....' என்று பல குற்ற உணர்வுகளை உங்களிடம் விதைப்பார்கள் .


 இந்தக் குற்ற உணர்வு உங்கள் ஆழ்மனதில் பதிந்து அவர்கள் சொல்லியபடியே வேலை செய்துவிடும் !


சுய இன்பத்தால் ஏற்படும் விந்து இழப்பில் எந்த சத்துப்பொருளும் கிடையாது ! 


ஆனால் விந்து மெதுவாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் . 


இது ஒன்றுதான் பிரச்சினை . 


இதற்குத் தகுந்த டாக்டரைப் பார்த்தால் சரி செய்துவிடலாம் . 


இப்பொழுது நல்ல மருந்துகள் இருக்கின்றன .


ஆகவே குழந்தைகள் அதன் இயல்பிலேயே தைரியமாக வளர அனுமதியுங்கள் . 


வயது ஏற ஏற அவனிடம் மெல்ல மெல்ல விழிப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் கூடுகிறது . 


ஒன்றை கவனித்திருக்கிறீர்களா ? 


சிறு பிள்ளைகள் கிட்டிப்புல் , சடுகுடு போன்ற விளையாட்டுக்களில் மிக மிக ஆர்வமாக இருக்கிறார்கள் . 


ஆனால் சுமார் 10 - லிருந்து 14 வயது காலத்தில் அது எப்படி மறைகிறது ?


 அந்த ஆர்வம் எங்கே போயிற்று ? 


பிறகு ஏனோதானோ என்று பார்த்த ஆண் , பெண் பார்வையில் எப்படி ஒரு ஆழம் , ஒரு கவர்ச்சி ஏற்படுகிறது ?


 எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலைதான் ! 


ஆகவே பழக்கம் எல்லாம் வயதுக்கு ஏற்ற மாதிரிதானே மாறும் . 


ஆனால் இதில் ஒருசில விதிவிலக்குகளும் உண்டு ! 


அதைப் பார்த்து சஞ்சலப்பட வேண்டாம் 

......


b ) . ‪#‎ஓரினச்சேர்க்கை‬ ( Homosexual ).


‪#‎இப்பொழுது‬ அந்தக் குழந்தையை அதன் இயல்பிலேயே விட்டால் , தன் உடலில் தானே இன்பம் காணுவதிலிருந்து மாறி தன் தன் இனத்தைச் சேர்ந்த பிற ஆண் / பெண் உடலை நேசிக்கும் . 


இது சுமார் 14 - லிருந்து 18 வயதில் இருக்கும் . 


ஆனால் இதில் பெரும்பாலோர் ஈடுபடுவதில்லை . 


காரணம் அந்த மனதுடையவர்கள் கிடைப்பது கடினம் . 


பெரும்பாலோர் முதல் கட்டத்திலேயே நின்றுவிடுவார்கள் . 


மேலும் இதைச் சமூகம் ஒருக்காலும் அனுமதிப்பது இல்லை . 


அப்பொழுது அவர்கள் அந்த நபரை நினைத்துக்கொண்டு சுய இன்பம் காணுகின்றனர் . 


ஆனால் ஒரு சிலர் கூடி வாழவும் செய்கின்றனர் . 


இதற்கு அவர்களது உடலில் உள்ள பாலுணர்வு ஹார்மோன்களும் பெரும்பங்கு வகிக்கின்றன . 


ஆனால் 100 - க்கு 95 சதவிகித மக்கள் அடுத்த கட்டத்துக்குத் தானே செல்லுகின்றனர் .


c ) . மாற்று இனச் சேர்க்கை ( Heterosexual )


பிறகு இந்த மூன்றாவது மாற்று இனச்சேர்க்கை இயல்பாக உண்டாக ஆரம்பிக்கிறது . 


ஆனால் உடனே இதற்குச் சமூகம் இடம் கொடுப்பது இல்லை . 


முக்கியமாக ஆண் பொருளாதாரத்தில் தனித்து நிற்க முடியுமா என்று பார்க்கிறது . 


ஒரு ஆணை அவன் சம்பாதிப்பதை வைத்து தேர்ந்தெடுக்கிறது . 


ஆனால் காதலிப்பது என்பது ஆண் / பெண்களிடையே சகஜமாகிறது .


 இதற்குச் சமூகம் மிகப்பெரிய முட்டுக்கட்டை போடுகிறது . 


காரணம் பல இருக்கின்றன . ஆனால் அவர்களிடம் ஒரு இனம் புரியாத கவர்ச்சி ஏற்படுகிறது .


இயற்கை தன் விளையாட்டை மிகத் தாராளமாகவே அவர்களிடம் செய்திருக்கிறது ! 


இப்பொழுது கவிதை , ஆடல் , பாடல் , ஓவியம் , சிற்பம் என்று எல்லாக் கலைகளும் பிறக்கின்றன .


 ஆண் , பெண்ணில் கரைய நினைக்கிறான் . பெண் , ஆணில் கரைய நினைக்கிறாள் . 


அப்பொழுது உடல் இரண்டாக இருந்தாலும் ஆன்மா ஒன்றுகிறது .


 இதுதான் மனமற்ற நிலையின் அகங்காரமற்ற தன்மையின் முதல் அனுபவம் எனலாம் .


ஒரு பெண் கலவியின்போது உச்ச இன்பத்தில் மனம் செயல்படாமல் கண்டபடி கத்துவாள் . ' ஐயோ என்னைக் கொல்லாதே !' என்றுகூட கூவுவாள் .

 இது ஏன் ? 


உச்ச இன்பத்தில் அவள் இறப்புணர்வையும் தொடுகிறாள் .


 காரணம் மனம் பூரணமாக இறக்கிறது ! 


d). பிரம்மச்சரியம் ( Celibacy ) :


மேற்கண்ட நிலையை உணர்ந்த பிறகு , எப்படி ஒரு ஆண் / பெண் மற்றவர் துணையில்லாமல் அந்த நிலையை அடைவது என்று ஒரு ஆவல் இயல்பாக ஏற்படும் . 


ஏனெனில் ஒருவரைச் சார்ந்து இருப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் கொடுக்கும் . 


ஆகவே இந்த மாற்று இனச்சேர்க்கையில் உச்சத்தன்மையை அடைந்தவர்கள் வேறு முறைகளின் மூலம் - உதாரணமாக யோகம் , தந்திரா தாவே ( TAO) மூலம் அதை அடைய முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள் .


 ஆன்மீகத்தில் இது சாத்தியம்தான் !


 ஏனெனில் ஒரு ஆணின் மன ஆழத்தில் ஒரு பெண்ணும் , ஒரு பெண்ணின் மன ஆழத்தில் ஒரு ஆணும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் .


 அதற்கு முக்கிய காரணம் அவர்களது பிறப்புக்கு ஒரு ஆணும் பெண்ணும்தான் காரணம் . 


ஆகவே , ஒவ்வொரு ஆணும் / பெண்ணும் , பாதி ஆணாகவும் / பாதி பெண்ணாகவுமே இருக்கிறார்கள்.


நீங்கள் வெளியே உள்ள ஆணோடு அல்லது பெண்ணோடு சேரும்பொழுது உங்கள் உள்ளே உள்ள பெண்ணோடு / ஆணோடுதான் சேர்ந்து உண்மையான கலவி இன்பத்தை அனுபவிக்கிறீர்கள் .


 அப்பொழுது வெளியே உள்ள மாற்றுப் பாலினத்தவர் வெறும் தூண்டுகோலாகவே இருக்கின்றனர் .


உங்களிடம் ஆண்மை இல்லாதபொழுது விந்து சுரக்காதபொழுது உங்களை எந்த அழகியாலும் தூண்ட முடியாது .


 கிளர்ச்சி அடையச் செய்ய முடியாது .


 அடுத்து இப்பொழுது அந்த உணர்வோடு உங்கள் தியானத் தன்மையைக் கலக்கவும் . 


அதாவது அந்த இன்ப உணர்வை ஒரு சாட்சியாக நின்று பார்க்கவும் . 


இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும் .


 இதுதான் உண்மையான பிரம்மச்சரியம் . 


இந்த நிலையில் வெளிப்படையான காமம் முற்றிலும் மறைந்துவிடுகிறது .


இப்பொழுது உங்களுக்கு வெளியில் எந்த ஆணும் / பெண்ணும் தேவையில்லை . 


இது ஒரு நிரந்தரமான திருமணம் !


 இப்பொழுது உங்களால் நினைத்த நேரத்தில் அந்த உச்சத்தன்மையைத் தொட முடியும் . 


ஒரு புத்தர் அந்த நிலையில் தொடர்ந்து இருக்க முடியும் .


இப்பொழுது சிற்றின்பம் , பேரின்பமாக மாறுகிறது ! 


நான் இப்பொழுதும் அந்த நிலையில்தான் இருக்கிறேன் . 


அந்த நிலைக்கு உங்களையும் அழைக்கிறேன் .


 அந்த நிலையை அடைந்தவன் ஒருக்காலும் பிற பெண்களை அல்லது பெண்ணானால் ஆண்களைக் காமத்தோடு பார்க்க முடியாது .


 ஏனெனில் அது தேவையில்லை . 


என் கண்களைப் பாருங்கள் புரியும் !


என்னுடைய காம அனுபவங்கள் எல்லாம் பல பிறவிகளின் ஞாபகங்கள்தானே தவிர , இந்தப் பிறவியில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை . 


நான் பல பிறவிகளில் புத்தாவாகவும் , ஜோர்பாவாகவும் இருந்திருக்கிறேன் .


 இந்தப் பிறவி நான் ஞானமடைவதற்காகவே ஏற்பட்டது .


 இனிமேல் எனக்குப் பிறப்பு இல்லை . இதுதான் என் கடைசிப்பிறவி " ...


ஓஷோ

  • Share:

You Might Also Like

0 comments