மாதுளம் பழச்சாற்றுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.....!
மாதுளம் பழச்சாற்றுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.....!
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். இதனால் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
மாதுளம் பழத்தை அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்குவதோடு, ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றும் பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த அல்சரையும் குணமாக்குகிறது.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.
– அனைவருக்கும் பகிருங்கள்
பழங்களை அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்குமா? இல்ல ஜூஸாக்கி... குடிக்கலாமா
💫🌹பழங்களை அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்குமா? இல்ல ஜூஸாக்கி... குடிக்கலாமா....????🌹💫
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தினமும் ஒன்று அல்லது இரண்டுவிதமான பழங்கள் அவசியம் சாப்பிடவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
விலை உயர்ந்த பழங்கள் மட்டும் தான் உடலை உறுதி செய்யும் என்பதில்லை. விலை குறைந்த கொய்யா, வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு வகையறாக்கள் உயர்வகை பழங்களுக்கு இணையான சத்தையும், சுவையையும் கொண்டிருப்பவையே.
உணவை போன்றே பழங்களை சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு. பழங்களின் குணங்களை பொறுத்து அதை காலை நேரத்தில், வெறும் வயிற்றில், உணவு இடைவேளையில், இரவு நேரங்களில் என்று எடுத்துகொள்கிறோம். ஆனால் பழங்களை எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்ற முறையும் உண்டு.
பழங்களில் இருக்கும் சத்துகள் உடலுக்கு தேவை என்று தான் பழங்களை அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால் அதை அப்படியே சாப்பிட்டால் நல்லதா இல்லை சாறாக்கி குடித்தால் நல்லதா என்று தெரிந்துகொள்வதும் அவசியம்.
பழங்கள்
பழங்களில் இருக்கும் உயர்தர ஊட்டச்சத்துகள் நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி உடலில் எதிர்ப்பு சக்திக்கு வலு சேர்க்கிறது. பழங்களில் உள்ள ஃபைடோ கெமிக்கல்ஸ் நமது திசுக்களை பாதுகாக்கிறது.
மனசோர்வை அதிகரிக்கும் பி 12 வைட்டமின் குறைபாடு குறித்து தெரிஞ்சுக்கலாமா?
அதனால் தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து கடைபிடித்தாலே நோய் தாக்கும் அபாயத்திலிருந்து பெருமளவு பாதுகாத்து கொள்ளமுடியும். நீரிழிவு, இதய நோய் அதிகபட்சமாக புற்று நோய் வரையான நோய்களை வராமல் தடுக்கும் குணம் பழங்களுக்கு உண்டு.
ஆனால் அந்த குணங்களை சிதைக்காமல் உடலுக்கு சென்றால் மட்டுமே முழுமையான பலனை நம்மால் பெறமுடியும். இதை எப்படி எடுத்துகொள்ளலாம் பார்க்கலாம்.
எப்படி சாப்பிடலாம்???
தினம் ஒரு பழம் என்று சாப்பிட வேண்டும். அனைத்து பழங்களையும் கலந்து பழ சாலட் சாப்பிடுவதை காட்டிலும் ஒரே வகையான பழத்தை சாப்பிட வேண்டும். பழங்களை நறுக்கி அலங்கரித்து சாப்பிடுவது பிடிக்கும் என்பவர்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் போன்ற பழங்களை அப்படியே தோலோடு கடித்து சாப்பிட வேண்டும். (சாப்பிடுவதற்கு முன்பு இளஞ்சூடான நீரில் பழத்தை நன்றாக கழுவி எடுப்பது அவசியம்) வளரும் குழந்தைகளுக்கு பழக்கும் போது சிறூ துண்டுகளாக நறுக்கி கொடுக்கலாம்.
அப்படி கொடுப்பதையும் உடனடியாக சாப்பிட வைத்து பழக்க வேண்டும். பெரிய பழங்கள் பப்பாளி, முலாம் பழம், தர்பூசணி, பலாப்பழம் போன்றவற்றை தோல் நீக்கி தான் சாப்பிட முடியும். ஆனாலும் சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது
ஏன் கடித்து சாப்பிட வேண்டும்???
பழங்களை கடித்து சாப்பிடுவதன் மூலம் பழங்களில் இருக்கும் சத்துகள் முழுமையாக கிடைக்கும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாறாக்க அரைத்து வடிகட்டும் போது அதில் இருக்கும் நார்ச்சத்துகள் வெளியேறிவிடுகிறது. உடலுக்கு ஃப்ளேவனாய்டு அதிகம் தேவை.
இவை புற்றுநோய் தவிர்ப்பது முதல் சருமம், கூந்தல் வரை அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த ஃப்ளேவனாய்டுகள் பழங்களில் அதிகமாகவே உண்டு. சாறாக்கி வடிகட்டும் போது இதன் அளவு குறைகிறது. அடுத்தது பழங்களில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் பழங்களை முழுமையாக சாப்பிடும் போது முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது. இதை சாறாக்கி சாப்பிடும் போது இது 20% முதல் 25% வரை சத்துகள் குறைவாக பெறமுடிகிறது.
அதோடு பழங்களை சாப்பிடும் போது நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் தேவைக்கு அதிகமாக நம்மால் சாப்பிடமுடியாது. ஆனால் பழச்சாறை சற்று கூடுதலாக சாப்பிடுவோம். அதனால் இயன்றவரை பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது.
பழச்சாறு தவிர்க்க வேண்டுமா??
எல்லா பழங்களையும் அப்படியே சாப்பிட முடியுமா என்று கேட்கலாம். அப்படியே கடித்து சாப்பிட வேண்டிய பழங்கள் ஆப்பிள், பப்பாளி, கொய்யா, வாழைப்பழம், மாதுளை, தர்பூசணி, திராட்சை, அன்னாசி, செர்ரி,பலாப்பழம் இவற்றை சாப்பிடலாம்.
பழங்களை சாப்பிட நேரம் இல்லாத போது, பழச்சாறாக்கி குடிக்கலாம். அதிக அளவு பழங்கள் இருக்கும் போது அவை வீணாகாமல் இருக்க சாறாக்கி குடிக்கலாம். அப்படி பழச்சாறாக்கினாலும் அதில் பழங்களில் இருக்கும் இனிப்பே போதுமானது. அதில் கூடுதலாக சர்க்கரை சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்
என்ன செய்யலாம்
சில பழங்களை சாறாக்கி தான் குடிக்க முடியும். எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியமான பழ வகை என்றாலும் சாறாக்கி தான் குடிக்க முடியும். அதே நேரம் குழந்தைகளும் வயதானவர்களும் பழங்களை சாப்பிடுவதை விட பழச்சாறுகளை தான் விரும்புவார்கள். அப்படி கொடுக்கும் போது கண்டிப்பாக இனிப்பு சேர்க்க கூடாது.
பழங்களை அப்படியே சாறாக்கி குடிக்கும் பழங்கள் சரி. உதாரணத்துக்கு பப்பாளி, தர்பூசணி, ஆப்பிள் போன்றவற்றை அப்படியே சாறாக்கி குடிப்போம். ஆனால் மாதுளை அப்படி அல்ல சாறாக்கி வடிகட்டும் போது அவை நார்ச்சத்து இல்லாமல் போகிறது.
காய்ச்சல் வந்தா இதை சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், உடலுக்கு பலமும் கிடைக்கும்!
அதனால் இயன்ற அளவு பழங்களை அப்படியே சாப்பிட பழகுங்கள். நேரமில்லாமல் பிஸியாக இயங்கும் நேரத்தில் பழச்சாறாக குடிக்கலாம். அதிலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் மட்டுமே. மற்ற நேரங்களில் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
✹ நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.
✹ நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.
✹ இலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.
✹ கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்து காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.
✹ நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.
✹ தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.
✹ வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.
✹ பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.
✹ நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், இதயம் நுரையீரலுக்கு பலத்தை கொடுக்கவல்லதும், தோல்நோய்களை போக்க கூடியதுமான நறுவிலி மரத்தின்(INDIAN BERRY) நன்மைகள் குறித்து காணலாம். இது மூக்குசளி பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நறுவிலி மரம். இதன் அனைத்து பாகங்களும் பயன் தருகிறது. இதன் பழங்கள் அற்புதமான மருந்தாகிறது. இது பசைப்போல ஓட்டிக்கொள்ளும் தன்மை உடையது. நறுவிலி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் நெஞ்சக சளி வெளியேறும். இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்கி ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். புண்களை ஆற்றும்.
மேலும், புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதை மேல் பற்றாக போடும்போது தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தேனீராக்கி குடிப்பதால் நுரையீரல், இதயத்துக்கு பலம் தருகிறது.
நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:*
நறுவிலி பழம், சீரகம், பனங்கற்கண்டு.
*செய்முறை:*
நறுவிலி பழத்தை நசுக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர நெஞ்சு சளி வெளியேறும். இதயத்துக்கு பலம் தரும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும்.
நறுவிலி மரத்தின் இலைகளை பயன்படுத்தி நெஞ்சக சளி, ஆஸ்மா பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:*
நறுவிலி இலைகள், மிளகுப்பொடி, தேன்.
*செய்முறை:*
நறுவிலி இலைகளை அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்துவர ஆஸ்துமா சரியாகும். நெஞ்சக கோளாறு, நுரையீரல் கோளாறு, குரல்வளையை பற்றிய நோய்கள் குணமாகும்.
நறுவிலி மரத்தின் பழங்களை பயன்படுத்தி தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். *தேவையான பொருட்கள்:*
நறுவிலி பழம், தேங்காய் எண்ணெய்.
*செய்முறை:*
நறுவிலி பழத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி மேல்பூச்சாக பூசிவர தேமல், படர்தாமரை, அரிப்புடன் கூடிய தோல் நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட எளிதில் கிடைக்க கூடிய நறுவிலியை பயன்படுத்துவதால் உடல்நலம் பெறலாம்
மருத்துவம் நறுவிலி👆👆
வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஸ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இந்த ஆய்வு முடிவுகள்
மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.
தினமும் பொட்டாசியம் அளவு 1600 மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ரோக் ரிஸ்க் குறைகிறது.
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் உள்ள திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது.




